News March 14, 2025
ஹோலி கொண்டாட ஆசையா?

இந்தியா முழுவதும் இன்று (மார்.14) ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. வடஇந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்றால் நாம் ஹோலி கொண்டாடலாம். குறிப்பாக, சவுகார்பேட்டை, கீழ்பாக்கம், வெப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய இடங்களுக்கு சென்றால் ஹோலி கொண்டாடலாம். ஹோலி பண்டிகையை கொண்டாட பெரும்பாலும் இளம் வயதினரே விரும்புகின்றனர். இந்த இடங்கள் அவர்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கும்.
Similar News
News March 10, 2026
சென்னை: கிணற்றில் குதித்த தந்தை- தூக்கில் மகள்!

சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் பகுதியில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (57), இளைய மகள் பாக்கியா (30) திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 07.03.26 வீட்டை விட்டு சென்ற அவர், நேற்று கிணற்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல் பாக்கியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
News March 10, 2026
சென்னை: ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து!

நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் (47), நித்தின்காமேஷ் (22) என்பவரின் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவின் டயரில் காற்று இறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நித்தின்காமேஷ், சந்திரசேகரை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


