News February 18, 2025

ஸ்ரீவைகுண்டம்: பாலியல் தொந்தரவு – ஆயுள் முழுவதும் சிறை!

image

ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் முருகன்(36). கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இவரை ஸ்ரீவை., அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், முருகன் தனது எஞ்சிய காலம் முழுவதும் சிறையில் இருக்கும்படி ஆயுள் கால சிறை வழங்கி தூத்துக்குடி போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News November 8, 2025

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 8, 2025

தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

image

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!