News December 25, 2025

 ஸ்ரீவி.,யில் மகனின் மரண மர்மம் 3 ஆண்டாக பரிதவிக்கும் பெற்றோர்

image

ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர்கள் விஜய விநாயகம் 57, சுரேகா 50 தம்பதியினர். மகன் சிவபிரசாத். 7th படித்து வந்தார். 2022 ஜன. 22ம் தேதி வீட்டின் நிலையில் சிவப்பிரசாத் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து மாணவரின் பெற்றோர் தங்கள் மகன் இறப்பு, தற்கொலையாக இருக்காது. கொலையாக இருக்கலாம் என புகார் அளித்து இன்று வரை விடை தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

விருதுநகர் மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்க <<>>மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 28, 2025

விருதுநகர்: குடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை

image

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் முருகானந்தம் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இன்று முருகானந்தம் அம்மா சுந்தரம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தராததால் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News December 28, 2025

விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

image

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் முனியாண்டி கோவில் பின்புறம் மலை அடிவாரத்தில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இங்கு நேற்று காலை 6:30 மணிக்கு வனகாப்பாளர் ஆனந்தி குழுவினர் ரோந்து செல்லும் போது 7 இடங்களில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

error: Content is protected !!