News February 22, 2026
ஸ்ரீவி: போக்சோ வழக்கில் இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஶ்ரீவி.,அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, சுப்புராஜூவை கைது செய்தனர்.
Similar News
News February 23, 2026
சிவகாசியில் கட்டையால் தாக்கி ஒருவர் கொலை

சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (35). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராமரை அவரது மனைவியுடன் சேர்ந்து வாழும் படி அவரது தம்பி சபரிராஜன் தகராறு செய்துள்ளார். அபோது ஆத்திரமடைந்த ராமர் கட்டையால் சபரி ராஜனை தாக்கியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 23, 2026
விருதுநகர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு..!

விருதுநகர் மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 23, 2026
விருதுநகர்: மழை நேரங்களில் ஒரு மெசேஜ் போதும்!

விருதுநகர் மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், விருதுநகர் மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். மறக்காம SHARE பண்ணுங்க!


