News November 26, 2025
ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.
Similar News
News November 27, 2025
விருதுநகர் அருகே விவசாயி மர்மமான முறையில் மரணம்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டியை சேர்ந்த விவசாயி ரகுநாதன் 55. இவர் கடந்த 25ம் தேதி தனது தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது ரகுநாதன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது செல்லும் வழியில் பலியானார். விவசாயியின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 27, 2025
விருதுநகர் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
சிவகாசி அருகே வீட்டில் பீரோவை உடைத்து நகை கொள்ளை

சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் அழகர் 50. ஆடு, கோழிகள் வளர்த்து கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்துலட்சுமி 45, வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அழகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது முத்துலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்கச் செயின், நான்கரை பவுன் கம்மலை திருடினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


