News January 15, 2026

ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

image

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.

Similar News

News January 28, 2026

ஸ்ரீவி: முன்னாள் ராணுவ வீரர் கைது

image

சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரரான மல்லி அருகே பூவநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 28, 2026

விருதுநகர் : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

ஸ்ரீவியில் வீடியோ பதிவிட்டவர் மீது வழக்கு

image

ஶ்ரீவி.,காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கைகளை விடுவிக்கக்கோரி திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சரத்குமார் என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீவி.நகர் போலீசார் சிறப்பு எஸ்.ஐ வில்லியம் டக்லஸ் கொடுத்த புகாரில் சரத்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

error: Content is protected !!