News February 11, 2025

ஸ்ரீவி.ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை

image

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் கடந்த 2016-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்த நாளில் ஆண்டுதோறும் வருஷாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த 8 ஆம் தேதி பூஜைகளுடன் தொடங்கியது. ஆண்டாள் கோயில் முன் உள்ள யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

Similar News

News March 13, 2026

ராஜபாளையம் அருகே இளைஞர் அடித்துக் கொலை

image

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (35), இவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அவரின் நண்பர்கள் மாரியப்பனை பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜபாளையம் போலீசார், உடலை மீட்டு தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

News March 12, 2026

விருதுநகர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

விருதுநகர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!