News November 26, 2025
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 13 லட்ச ரூபாய் காணிக்கை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத் துறை உதவி ஆணையா் வளர்மதி தலைமையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 115 ரூபாய் 51 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தது.
Similar News
News March 11, 2026
BREAKING சிவாகாசி: பட்டாசு ஆலைக்குள் வெடி விபத்து

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணியில் விஜயகுமாருக்கு சொந்தமான ரோஸ் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்கள் இன்றி பூட்டிக் கிடந்த குடியிருப்பில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மின் வயர் அறுந்து விழுந்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி குடியிருப்பு சேதமடைந்தது தெரியவந்தது.
News March 11, 2026
விருதுநகர்: Spam Calls தொல்லையா? இனி END CARD!

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
காரியாபட்டி: மூதாட்டி கொலையில் தாய், மகள் கைது

திருச்சுழி – காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி காட்டுப் பகுதியில் நேற்று பண்ணை மூன்றடைப்பை சேர்ந்த மூதாட்டி அம்பிகா என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரனையில் தோப்பூரை சேர்ந்த லோகாம்பாள்(39), அவரது 17 வயது மகள் ஆகியோர் சுபநிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வதாக கூறி மூதாடியை பைக்கில் அழைத்துச் சென்று மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


