News January 5, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடங்களாக பிரிந்து ராமசாமி அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ராமசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அப்பயநாயக்கன்பட்டி, வலையபட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், எதிர்க்கோட்டை ஆகிய இடங்களில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அதிகம் தென்படுவதாகவும், மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வதாகும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
News January 24, 2026
விருதுநகர் : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

விருதுநகர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு கிளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 24, 2026
விருதுநகர் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு

விருதுநகரை சேர்ந்த 53 வயதான நபர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக கடந்த 2024ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் குழந்தைகள் & பாலியல் வன்கொடுமை குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யபட்டு நேற்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.


