News September 7, 2025
ஸ்ரீவியில் ஆட்டோ ஏற்றி கொலை செய்த கொடூரம்

ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரைகுளம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பொன்ராஜ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்து சென்ற செந்தில்குமார் மீது பொன்ராஜ் ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 7, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

விருதுநகர் மக்களே, நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறியலாம். SHARE IT
News September 7, 2025
மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது

கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விருதுநகர் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக மல்லாங்கிணர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு பரிசு காவலர் நாளில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
News September 7, 2025
மானிய விலையில் காய்கறி, பழச்செடிகள் தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.