News August 24, 2024
ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படிதுரை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும், உறுதியாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Similar News
News November 3, 2025
திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (நவ.4) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லால்குடி ஒன்றியம் ஜெங்கமராஜபுரம் பகுதியிலும், துறையூர் ஒன்றியம் ரங்கநாதபுரம் பகுதியிலும், முசிறி ஒன்றியம் ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஒன்றியம் கருப்பூர் பகுதியிலும் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
திருச்சி: கார் மோதி பெண் துடிதுடித்து பலி

நவல்பட்டை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி கோகிலா(49) நேற்று இரவு, மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதியதில் கோகிலா தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கோகிலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டிவந்த ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
திருச்சி: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


