News February 12, 2026
ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர் மாவட்டம், சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி சேகரிக்க திருச்சி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் சென்றனர். அப்போது அவர்கள் மீது கண் மூடித்தனமாக கொடூரமாக தாக்கிய வழக்கில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இன்று நீதிமன்றத்தில் ஆஜார் ஆனார். உடன் அவரது மகனும் ஆஜர் ஆனார்.
Similar News
News February 14, 2026
திருச்சி: SBI வங்கியில் வேலை அறிவிப்பு

SBI காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 14, 2026
திருச்சி: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
திருச்சி: மாடு குறுக்கே வந்ததால் விபரீதம் – போலீஸ் பலி!

திருச்சி விமான நிலையம் வயர்லஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர், நேற்று காலை தனது டூவீலரில் கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


