News November 23, 2025

ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Similar News

News November 25, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

image

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 25, 2025

திருச்சியில் கோர விபத்து

image

திருச்சி வரகனேரியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, நிகேஷ் ஆகியோர் டூவீலரில் நேற்று தென்னூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காட்டூரைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News November 25, 2025

திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

image

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

error: Content is protected !!