News December 14, 2025

வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

image

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

நாமக்கல் முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தில் நீடிக்கின்றது.

News December 15, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று டிசம்பர்-15ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிடமிருந்து ஆட்சியர் துர்காமூர்த்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

News December 15, 2025

திருச்செங்கோடு அருகே சோகம்!

image

திருச்செங்கோடு அருகே சோமனம்பட்டியில் அய்யனார் (21) கடந்த 07-டிசம்பர் அன்று வயிற்று வலி காரணமாக விஷம் குடித்துள்ளார். முதலில் உறவினர்கள் அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பிறகு மேல்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் KMCH மருத்துவமனையில் அனுப்பப்பட்டார். ஆனால், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!