News December 14, 2025
வையப்பமலை அருகே சோகம்: தொழிலாளி விபரீத முடிவு!

வையப்பமலை அருகே இராமாபுரம் அடுத்த மாந்தோப்புகாலனி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி செங்கோட்டுவேல் (37) குடும்ப தகராறில் மனவிரக்தி அடைந்து நேற்று விஷம் குடித்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.13) இறந்து விட்டார். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
நாமக்கல்லில் நாளை வேலை மழை! 10,000+ காலிப்பணியிடம்

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (20.12.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், 10,000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள் முன்பதிவு செய்ய 04286-222260/ 6380369124 எங்களில் தொடர்பு கொள்ளலாம்.
News December 19, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (19-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ.118-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடித்து வருகிறது. வட மாநிலங்களில் நிலவும் அதிகப்படியான குளிரின் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், முட்டை விலை சரிவின்றி உச்சநிலையில் நீடித்து வருகிறது.
News December 19, 2025
ப.வேலூர் அருகே தட்டி தூக்கிய போலீசார்!

ப.வேலூர் அருகே தெற்கு நல்லியாம்பாளையத்தில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக தகவலின் பேரில் வேலூர் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரைகள் விற்ற தெற்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பசுபதி, பிரபு,அபிதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ப.வேலூர் போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.


