News May 11, 2024
வைகை அணை: தற்காலிக தடை விதிப்பு

வைகை பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து நேற்று (மே 10) காலை 10.15 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் 11.30 மணிக்கு விநாடிக்கு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News November 5, 2025
தேனியில் 5 தாசில்தார்கள் பணியிடமாற்றம்

தேனி மாவட்டத்தில் 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். சுருளி தேர்தல் பிரிவு தாசில்தாரராகவும், செந்தில்குமார் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாரராகவும், உதயராணி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாரராகவும், சுந்தர்லால் அலுவலக மேலாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சரவணபாபு, ஆதிதிராவிடர் நலம் பிரிவு தனி தாசில்தாரராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News November 5, 2025
தேனி: வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (44). இவரது மகளுக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாக கூறி வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (42), அவரது நண்பரான கரூர் முருகேசன் (48) ஆகியோர் 2022-ல் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியகுளம் போலீசார் ராஜகோபால், முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


