News April 20, 2024

வைகை அணை அருகில் குளித்த இருவர் பலி

image

மதுரை, ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வைகை அணை அருகிலுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை திருவிழாவிற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வரத்து அதிகரித்து சுழலில் சிக்கிய இருவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

Similar News

News September 14, 2025

மதுரை: தொழிலதிபர் படுகொலை-2 தனிப்படை அமைப்பு

image

மதுரை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் ராஜ்குமார் (வயது 50), நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை குறித்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் மின்விளக்குகள் எரியாத நிலையில் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைக்காமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.

News September 13, 2025

மதுரை: உங்க நீதிமன்ற CASE பற்றி தெரிந்து கொள்ள..!

image

மதுரை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகிறீர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phone ல் வரும் இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE IT..!

News September 13, 2025

மதுரை: நாய் குறுக்கே வந்ததால் பலியான உயிர்

image

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகர் ஜெயபால் மகன் வீரக்குமார் (26). அதே பகுதி சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் வீரக்குமார் பிரேக் அடிக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருக்கும் காம்பவுண்ட் சுவரில் மோதியாது. சாக்கடை பள்ளத்தில் விழுந்த வீரக்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!