News July 3, 2024
வைகை அணையில் 3 மாவட்ட ஆட்சியர்கள்

வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். மேலும், இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News July 10, 2025
குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.
News July 10, 2025
மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆரப்பாளையம் பஸ் நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் நகர, புறநகர் பஸ்கள் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் வழியாக செல்லவேண்டும்.ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் நகர் பஸ்கள் குருவி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
News July 10, 2025
மதுரையில் ரூ.37 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் SHRI திட்டத்தின் கீழ் நடைபெறும் “மதுரையின் சித்திரை விழா ஆடைகள், நடனங்கள் மற்றும் சடங்குகளை பாதுகாப்பதற்கான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்பாடு” என்ற ஆராய்ச்சி திட்டத்திற்காக, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (JRF) மற்றும் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்/புலத் தொழிலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.