News August 20, 2025
வேளாண் மார்க்கெட் கொள்முதல் – 1 லட்சம் விவசாயிகள் பலன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கமிட்டிகள் மூலம், கடந்த 4 மாதங்களில் ரூ.260 கோடி மதிப்பில், 84 ஆயிரம் டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மொத்தம் 9 மார்க்கெட் கமிட்டிகளில் 1,01,212 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 84,747.46 டன் வேளாண் விளைபொருட்கள், ரூ.260.59 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்! (2/2)

இத்திட்டத்தின் மூலம் 60% சிறுபான்மையினர் மற்றும் 40% இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் பயனடையலாம்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க
▶️ வருமானச் சான்றிதழ்
▶️ சாதிச் சான்றிதழ்
▶️ பள்ளி மாற்றுச் சான்றிதழ்
▶️ இருப்பிடச் சான்றிதழ்
▶️ குடும்ப அட்டை
▶️ ஆதார் அட்டை
▶️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க..
News August 20, 2025
விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், தனிநபர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இடங்களில் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். ஷேர் பண்ணுங்க. <<17460158>>தொடர்ச்சி<<>>..
News August 20, 2025
வேளாண் துறையில் ரூ.70 கோடி கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.70 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயனாளிகளுக்கு, 2 கோடி கடன் 7 ஆண்டுகள் 3% வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாய தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், விண்ணப்பிக்கலாம்