News April 24, 2024
வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

வாழப்பாடி வட்டாரத்தில் முகாமிட்டு அனுபவப் பயிற்சி பெற்று வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள், வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று புவி வெப்பமயமாதலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு, கருத்துரை வழங்கினர். தலைமை ஆசிரியர் சந்திரசேகர், ஆத்மா துணை மேலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News August 23, 2025
BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 23, 2025
சேலத்தில் நடிகர் கட்டியுள்ள கோயில் எங்கு தெரியுமா?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.
News August 23, 2025
சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.