News February 15, 2025

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

image

கடலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விபரங்களை பதிவு செய்யுமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் ஆவணங்களை பெற்று அடையாள எண் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவது உறுதிப்படுத்த முடியும். எனவேஅந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

Similar News

News August 14, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இன்று (ஆக.14) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

கடலூர் மக்களே.. ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு!

image

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் கடலூர் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து பெறலாம். SHARE IT NOW!

News August 14, 2025

மீன் குஞ்சுகள் இருப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

கடலூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை இயக்குனர் கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!