News November 15, 2025
வேளாங்கண்ணி பேராலய தொழிலாளி தற்கொலை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் ராஜேந்திரன்(57). இவர் அடிக்கடி வயிற்றுவலி நோயால் அவதிப்பட்டு வந்ததால், பிரதாபராமபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
நாகை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
News November 15, 2025
நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்!

நாகை மாவட்டத்தில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவ்வகையில்,
நவ.17ம் தேதி புலியூர்,
நவ.18ம் தேதி புலியூர், நாகூர் தர்கா
நவ.19ம் தேதி நாகூர் தர்கா, பெருங்கடம்பனூர்
நவ.20ம் தேதி கீழ தன்னிலப்பாடி
நவ.21ம் தேதி திருக்கண்ணங்குடி
நவ.22ம் தேதி சீயாத்தமங்கை, செருநள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.
இதனை SHARE பண்ணவும்.
News November 15, 2025
நாகை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


