News August 27, 2025

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை- ஆட்சியர்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

நாகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணியில் மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற ஆக.29ம் தேதி தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு பண்ருட்டியில் இருந்து நாகைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஆக.29 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் காலை 9:32 மணிக்கு பண்ருட்டியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு நாகைக்கும், பின்னர் 1.20 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மாலை 4:45க்கு பண்ருட்டி சென்று சேரும்.

News August 27, 2025

நாகை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

நாகை: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!