News January 21, 2025
வேலை வாங்கித் தருவதாக 1.11 கோடி மோசடி – பெண் கைது

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சுந்தர விக்னேஷ் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் பலரிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த கனக துர்கா, சூர்யா, சரண்யா ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.11 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏற்கனவே கனக துர்காவை கைது செய்த நிலையில் நேற்று (ஜன.20) சரண்யாவை கைது செய்தனர்.
Similar News
News November 12, 2025
தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 12, 2025
போடி: வீடு புகுந்து நகைகளை திருடிய சிறுவர்கள்

போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரது வீட்டுக்குள் புகுந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த 15, 13 வயது உடைய 2 சிறுவர்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


