News October 21, 2024
வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

வரதராஜபுரத்தைச் சேர்ந்த சுதர்சனா(31) வீட்டில் மணிமங்கலத்தைச் சேர்ந்த ஜோதிமணி (50) வீட்டு வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த 18 சவரனை நகை திருடி கொண்டு ஜோதிமணி தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மணிமங்கலத்தில் இருந்த அவரை சுதர்சனா பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஜோதிமணியிடமிருந்து 18 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News August 22, 2025
காஞ்சிபுரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News August 21, 2025
FLASH: காஞ்சிபுரத்தில் நடிகர் விஜய்க்கு பதிலடி தந்த இபிஎஸ்!

காஞ்சிபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுகவை வழிநடத்துவது யாரென்றே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்த நடிகர் விஜய்க்கு, அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சிக்கு தலைவர் இருக்க முடியும் எனவும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடிகர் விஜய் இருப்பதாகவும் கூறி அவர் பதிலடி தந்துள்ளார்.
News August 21, 2025
காஞ்சிபுரம்: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

காஞ்சிபுரம் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <