News January 2, 2026
வேலைவாய்ப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்ட குழந்தைகள் நலன் துறையில் காலியாக உள்ள உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.nagapattinam.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஜன.8-க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
நாகை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News February 9, 2026
நாகை: பாலியல் தொல்லை அளித்த கொத்தனார் கைது

கீழ்வேளூரை சேர்ந்தவர் முருகேசன் (40). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று மனவளர்ச்சி குன்றிய 30 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 9, 2026
நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.


