News April 6, 2025

வேலைவாய்ப்பற்ற தி.மலை இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை திட்டத்திற்காக மே 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தர்பகராஜ் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டு பதிவு செய்தவர்களுக்கு தகுதி உள்ளது. வயது மற்றும் வருமான வரம்பு உண்டு. tnvelaivaaippu.gov.in-இல் ஆன்லைனில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

இளம்பெண்ணை கடத்திய சென்னை போலீஸ்காரர்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி மகளான 24 வயது இளம்பெண், எம்.ஏ. பட்டதாரி. இவர் கடந்த 3ஆம் தேதி இரவு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீசில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) புகார் கொடுத்தார். அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த சென்னையில் போலீசாக பணிபுரியும் ரவிச்சந்திரன் (34) என்பவர் அப்பெண்ணை கடத்திச் சென்று இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

News April 7, 2025

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

image

நாட்டேரி கிராமத்தைச் சோர்ந்தவர் ஜெயலட்சுமி (35). இவரது மகன் நவீன்குமாா் (17). இவா் செய்யாற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நவீன்குமாா் சரிவர தொழிற்பயிற்சி நிலையத்துக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை இவர் தாய் கண்டித்ததால் மனமுடைந்த நவீன்குமாா், நேற்று (ஏப்ரல்.06) வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!