News January 17, 2025

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை: ஆட்சியர்

image

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200ஆம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ஆம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என வழங்கப்படும். கல்விச்சான்றுகள் அசல், நகல்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 23, 2025

தர்மபுரி விவசாயிகளுக்கு இலவச பயிற்சி!

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு நாளை (செப். 24) பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு, தென்னை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப் பயிற்சியில், பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயனடைய வேளாண் திட்ட இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர்

News September 23, 2025

தர்மபுரி புத்தகப் பேரவை விழிப்புணர்வு வாகனம்

image

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் ரெ.சதீஸ், பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உடனிருந்தார்.

News September 23, 2025

கரும்பு தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 24.09.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் விவசாயிகளுக்கு கரும்பு மற்றும் தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. ஆகையால் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேளாண் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!