News January 17, 2025
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை: ஆட்சியர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200ஆம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ஆம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என வழங்கப்படும். கல்விச்சான்றுகள் அசல், நகல்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 18, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


