News January 2, 2026

வேலூர்: 3 மாத குழந்தை பரிதாப பலி!

image

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், அஸ்வினி தம்பதி. இவர்களது 3 மாத குழந்தை யஸ்வந்த். நேற்று இவர்களின் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி மேல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பால் குடித்ததில் மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 3, 2026

வேலூர்: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 3, 2026

வேலூர் துணை ஜனாதிபதியை வரவேற்ற மேயர்!

image

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று (ஜனவரி 03) வேலூருக்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 3, 2026

வேலூர்: டிகிரி இருந்தால் வங்கியில் வேலை- CLICK HERE

image

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.10. சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!