News January 13, 2026
வேலூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள்<
Similar News
News January 27, 2026
வேலூர்: பாட்டியிடம் தங்கத்தை உருவிய கில்லாடி!

காட்பாடியை சேர்ந்தவர் ராஜம்மாள் (64). இவரிடம் அரசு ஓய்வு ஊதியத்தை அதிகப்படுத்தி தருகிறேன் என கூறி போட்டோ எடுக்க ஸ்டுடியோவுக்கு மர்ம நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 6 கிராம் தங்க நகையை கழட்டுமாறு கூறிவிட்டு நகை பையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட தேவமகேஷை (43) கைது செய்தனர்.
News January 27, 2026
வேலூரில் வாலிபர் துடிதுடித்து பலி!

கே.வி குப்பம் அடுத்த கீழ் விளாச்சூர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று (ஜன.26) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஹேமந்த் குமாரை கைது செய்தனர்.
News January 27, 2026
வேலூர்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். உடனே SHARE பண்ணுங்க.


