News November 22, 2025

வேலூர்: 13 சவரன் நகையை திருடிய வட மாநில பெண் கைது

image

காட்பாடி சேர்ந்தவர் பூவேந்தன் (66). இவர் கடந்த (செப் 26)ம் பெங்களூர் செல்வதற்காக மனைவியுடன் காட்பாடி ரயில்வே நிலையத்தில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏறும்போது பையில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது. இது குறித்து காட்பாடி ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் சிசிவி காட்சிகள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துர்கா (45) என்பவரை நேற்று (நவ.21) கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

வேலூர்: சீட்டு பிரச்சனையில் அடிதடி முடிவு!

image

குமரப்பநகரை சேர்ந்த ஏட்டு சிவக்குமார் (45), மாதச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் அப்பகுதி முன்னாள் ராணுவ வீரர் பத்ரிசேகர் (42 ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்து ரூ.4 லட்ச சீட்டை எடுத்தார். பின் 6 மாதங்களாக சீட்டு கட்டாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார், பத்ரிசேகரை தாக்கியுள்ளார். இதன் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

image

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 11, 2026

வேலூர்: வீடு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி!

image

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், பிலீப்ரிச்சர்ட் (49). இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி வீடு திரும்பிய குடும்பம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!