News September 4, 2025

வேலூர் விசாரணை கைதி மருத்துவமனையில் பலி

image

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருட்டு வழக்கில் குமார் (50) என்பவர் கைதாகி விசாரணை கைதியாக கடந்த ஜூலை முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 11, 2025

வேலூர் மாவட்டத்தில் 56 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர்-10) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News September 10, 2025

வேலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

ஊராட்சி தலைவர் திமுக கட்சியில் இருந்து நீக்கம்

image

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி திமுக கட்டுப்பாட்டை மீறியும் திமுகவிற்கு அவர் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்

error: Content is protected !!