News December 19, 2025

வேலூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

image

வேலூர் விருபாட்சிபுரம் பெரியார் நகர் பாறை மேட்டை சேர்ந்தவர் சவுரி (23) இவரது மனைவி பிரீத்தி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். மதுவுக்கு அடிமையான சவுரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த சவுரி ஆவேசத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

வேலூரில் பைக்குகள் தொடர் திருட்டு!

image

வேலூர் கொணவட்டம் அப்துல்ஷாகிப் தெருவை சேர்ந்தவர் அன்சார் (35). இவர், வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று வந்து பார்த்த போது பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மற்றொரு பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

காட்பாடி: நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு!

image

காட்பாடி பிரம்மபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58). இவர் நேற்று முன்தினம் வள்ளிமலை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இந்திரா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரா காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

image

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!