News February 2, 2026

வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

image

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News February 18, 2026

வேலூரில் வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்!

image

பள்ளிகொண்டாவை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (40). இவர் சம்பவத்தன்று ராமாபுரம் ரோட்டில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் வேனை வழி மறித்து இவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த செந்தில்குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் போலீசார் பிரதீப்ராஜ் (22), கார்த்தி, கவுதமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News February 18, 2026

வேலூரில் 10 நாட்கள்….துடிதுடித்து பலி!

image

அணைக்கட்டை சேர்ந்த சரவணன் (54), சேவூர் போலீஸ் பட்டாலியனில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிட்ச்சை பெற்று வந்த இவர் 11 நாட்களுக்கு பிறகு நேற்று (பிப்.17) உயிரிழந்தார். இது குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News February 18, 2026

வேலூரில் நள்ளிரவில் பயங்கர தீ!

image

வள்ளிமலை அடுத்த மகிமண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட மாந்தோப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊது வத்தி கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (பிப்.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்த்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. இது குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!