News February 3, 2026

வேலூர்: வளைவில் முந்தியதால் பிணமான வாலிபர்!

image

காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் ஜவகர் நேற்று (ஜன.2) சுப நிகழ்ச்சிக்காக கே.வி.குப்பம் நோக்கி பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த துரைமூலையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது கட்டுபாட்டை இழந்த பைக் ஜவகரின் பைக் மீது மோதியது. இதில், ஜவகர் இறந்தார். இதுகுறித்து கே.வி. குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News February 3, 2026

வேலூர்: தரம் கெட்ட செயலால் வீரர் பணியிடை நீக்கம்!

image

லத்தேரி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). இவர் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

News February 3, 2026

வேலூர்: தூக்கில் தொங்கி துடிதுடித்து பலி!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் பகுதியை சேர்ந்த சலூன் கடை நடத்திவரும் ராஜேஷ். இவரது மனைவி சங்கீதா (22) நேற்று (பிப்.2) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!