News December 9, 2025
வேலூர்: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

வேலூர் மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 10, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துகொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், துணை ஆட்சியர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

2026 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று(டிச.10) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


