News November 5, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் – கலெக்டர் தகவல்

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் நவம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் தனி தேர்தல் பிரிவு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக டி.எஸ்.பி இருதயராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரஜினி உட்பட 14 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, ஒரு வாக்குச்சாவடிக்கு எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
News February 11, 2026
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
வேலூர்: சீட்டு பிரச்சனையில் அடிதடி முடிவு!

குமரப்பநகரை சேர்ந்த ஏட்டு சிவக்குமார் (45), மாதச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் அப்பகுதி முன்னாள் ராணுவ வீரர் பத்ரிசேகர் (42 ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்து ரூ.4 லட்ச சீட்டை எடுத்தார். பின் 6 மாதங்களாக சீட்டு கட்டாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார், பத்ரிசேகரை தாக்கியுள்ளார். இதன் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


