News November 29, 2024

வேலூர்: ராணுவ ஊழியருக்கு 8 ஆண்டுகள் சிறை

image

ஊட்டி ராணுவக் கல்லூரியில் ஓட்டுநராக இருந்த உ.பி.யைச் சேர்ந்த யோகேந்திர சிங் பயில்வார், கடந்த 2018ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானார். இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் ராணுவ ஊழியர் யோகேந்திரசிங் பயில்வார்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60,000 அபராதமும் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Similar News

News August 25, 2025

கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17509672>>தொடர்ச்சி)<<>>

News August 25, 2025

வேலூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

வேலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் <<>>செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

error: Content is protected !!