News January 27, 2026
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஜனவரி 30-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
வேலூரில் பிளஸ்-2 செய்முறை தேர்வு

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்- 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று (பிப்.9) தொடங்கியது. மேலும் தேர்வுகள் வருகிற 14-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தேர்வுகள் முடிந்ததும் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 10, 2026
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
வேலூரில் தூக்கில் தொங்கிய மாணவன் !

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த நர்சிங் மாணவர் அரவிந்த் (22). இவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பல நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.9) அரவிந்த் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


