News April 7, 2025
வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2025
வேலூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பகுதிகளாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். *இரவில் வெளியே மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தேவைப்படும். கண்டிப்பாக பகிரவும்*
News April 8, 2025
வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய கலெக்டர்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.
News April 7, 2025
ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கவே நடக்காது: துரைமுருகன்

காட்பாடியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஏப்ரல் 6) அடிக்கல் நாட்டினார். பின்னர், பேட்டி அளித்த அவர், “2029ஆம் ஆண்டுக்கு பின்னர் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான பணிகள் தொடங்க உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிச்சயம் அதெல்லாம் நடக்காது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சாமி, ஒரே சாப்பாடு’ இதெல்லாம் நடக்காது” என கூறினார்.