News August 10, 2025
வேலூர் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம், வட ஆற்காடு ஓவியர் சங்கம் மற்றும் டாட் இமேஜிங் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இதில் 1 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 7667580831, 9443885207 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்றைய இரவு ரோந்து பணி

வேலூர் மாவட்டத்தில் ஆக.9 இரவு 10 மணி முதல் இன்று(ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 9, 2025
மாரத்தானில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று ஓடினார். இந்த மரத்தான், போதைப்பொருள் தடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
News August 9, 2025
வேலூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை. கவனம் மக்களே!

வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க