News October 25, 2024
வேலூர் மாவட்டத்தில் 75 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (அக்டோபர் 24) நடத்திய சோதனையில் 75 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள்!

வேலூர்: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வாங்கியுள்ளது. கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார்(35). இவர் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராவார். இந்நிலையில், அப்பகுதியில் கஞ்சா குறித்த சோதனைக்கு இவர் தான் காரணம் என நினைத்த திருமலை(36) என்பவர் கடந்த 2018ஆம் தேதி அசோக் குமாரை கொலை செய்தார்.
News November 7, 2025
வேலூர்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரான இவரை, கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாக நினைத்து, அதே பகுதியை சேர்ந்த திருமலை (36) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளியான திருமலை (36) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று (நவம்பர் 6) நீதிபதி கோகுல கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
News November 6, 2025
வேலூரில் நாளை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், நாளை நவம்பர் 7-ம் தேதி காலை 10:30 மணி அளவில், மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவலர்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


