News December 4, 2024

வேலூர் மாவட்டத்தில் 14 ஏரிகள் நிரம்பின

image

வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்கள் தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் 14 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும், 2,075 கனஅடி நீர் பாலாற்றில் செல்வதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News August 11, 2025

வேலூரில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

image

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். <>உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்கள். <<>>ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

வேலூர் மாவட்ட பொது சுகாதார துறையில் வேலை

image

வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் 22 காலிப் பணியிடங்கள் உள்ளன. செவிலியர், லேப் டெக்னீஷியன், சமூக சேவகர், பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் படித்தவர்கள் இன்றைக்குள் (ஆகஸ்ட் 11) இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0416 – 2252025 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

வேலூர் மாவட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு…

image

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. 1 – 3ஆம் வகுப்புக்கு சூரிய உதயம், 4 – 6ஆம் வகுப்புக்கு இயற்கை காட்சி, 7 – 9ஆம் வகுப்புக்கு தேசிய பெண் தலைவா்கள், 10 – +2 வகுப்புக்கு தேசிய ஆண் தலைவா்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவுக்கு 76675-80831, 94438-85207 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. பரிசுகளை அள்ளுங்க.

error: Content is protected !!