News January 3, 2026

வேலூர் மாவட்டத்தில் 1300 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு இன்று (ஜனவரி 03) இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

வேலூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

வேலூர்: காதலி முன் உடல் கருகி பலி!

image

காட்பாடி தாலுகா காசிகுட்டையை சேர்ந்தவர் தருண் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளி பருவம் முதல் காதலித்து வந்தார். இது குறித்து பெண்ணின் வீட்டார் தருணை கண்டித்ததால் காதலியின் வீட்டுக்கு முன் தீக்குளித்தார். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2026

வேலூர்: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி!

image

பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரின் மூத்த மகள் சுவாதி (17) அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று (பிப்.1) மதியம் ஜோதி தனது மகள் சுவாதியை வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கிறாயே எனக்கூறி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி சுவாதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!