News August 29, 2024

வேலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

image

வேலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து வரும் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த கண்காட்சி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளது. எனவே இதில் 30-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, 31-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய பேசிய டிஐஜி தர்மராஜ் காவல் நிலையங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக கோர்ட்டில் ஆஜராகாதவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

News August 21, 2025

காட்பாடியில் ரயில் சக்கரம் ஏறியதில் பெண் பலி

image

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (36) விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல, மனைவி சிந்து (32) உடன் காட்பாடி ரயில்வே நிலையம் வந்தார். நேற்று (ஆக.20) காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் மெதுவாக கிளம்பியபோது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை உணர்ந்த சிந்து, அதை கொடுக்க முயன்றார். அந்த நேரத்தில் தவறி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

News August 21, 2025

விஐடி பல்கலை.யுடன் இணைந்த முன்னணி நிறுவனம்

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஐஎம் நியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஆக.20) கையெழுத்தானது. விஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார், செயல் இயக்குநர் சந்தியாபென்ட ரெட்டி, துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

error: Content is protected !!