News December 29, 2024
வேலூர் மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி மிதிவண்டி போட்டிகள்

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 4-ம் தேதி மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது 74017 03483 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ வரும் 3-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
வேலூர் மாவட்டத்திற்கு இனிமே நிம்மதி!

பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்த 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி. மயில்வாகனன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிமேல் வேலூர் மாவட்டம் போதை பழக்கம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்.
News August 5, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.05) வேலூர் மாநகராட்சி மண்டலம் -4ல் டோல்கேட் நாதன் மஹால், கணியம்பாடி ஊராட்சி காட்டுப்புத்தூர் அண்ணாமலையார் மண்டபம், காட்பாடி ஊராட்சி சின்ன வள்ளி மலை ஜம்பு மகரிசி மண்டபம், பேர்ணாம்பட்டு ஊராட்சி கமலாபுரம் ஜி.எஸ்.எம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.
News August 5, 2025
காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.