News February 25, 2026
வேலூர்: மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!

காட்பாடியை சேர்ந்த நடராஜ் (69), பார்வை குறைபாடுடைய இவர் நேற்று சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க ஒரு வாலிபரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் உதவி செய்வது போல் நடித்து போலி ஏடிஎம் கார்டை நடராஜிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். வாலிபர் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் ரூ.20,800 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 26, 2026
வேலூர்: குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை

குடியாத்தம் அணங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோட்டீஸ்வரி(30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 24-ம் தேதி கோட்டீஸ்வரி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் கோட்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News February 26, 2026
வேலூர்: ஆழ் கிணற்றில் ஆண் பிணம் மீட்பு

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 26, 2026
வேலூர்: காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


