News September 9, 2025
வேலூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வேலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத்” கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, இன்று (செப்.9) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் செப்டம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (செப்.09) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
News September 9, 2025
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்.09) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள பொதுமக்கள், நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் அரசு மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.