News February 1, 2026

வேலூர் போலீசின் அதிரடி வேட்டை – 4 பேர் கைது!

image

பேரணாம்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று (ஜனவரி.31) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு (ரகுராம் 44) அருண்குமார் (33), கலைஞர் (56), கோவிந்தராஜ் (40), ஆகிய 4 பேரும் வீடுகளில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Similar News

News February 1, 2026

வேலூர்: மொபட்டில் இருந்து விழுந்த முதியவர் பலி!

image

வேலூர், விருப்பாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (63). இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 1, 2026

வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, வேலூர் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9042144504-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (0416-2220893) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!