News January 25, 2026
வேலூர்: போதையில் மூதாட்டியிடம் வெறி செயல்!

பெரியபரவக்கல்லை சேர்ந்தவர் அஜித்குமார் (24). குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை (77) அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மயங்கிய மூதாட்டி, இறந்து விட்டதாக நினைத்து அஜித் சென்று விட்டார். பின் மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குடியாத்தம் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
News February 4, 2026
வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.
News February 4, 2026
வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

வேலூரில் தொரப்பாடி, வடுகந்தாங்கல், சத்துவாச்சாரி, கார்ணாம்பட்டு துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, அரியூர், தொரப்பாடி சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும்.


